2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

கினிகத்தேனையில் வீதி தாழிறக்கம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையுடன்,ஆங்காங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இதற்கமைய, கினிகத்தேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக , பஸ் தரிப்பிடத்துக்கு செல்லும் வீதியின் ஒரு பகுதியில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், வீதியும் தாழிறங்கியுள்ளது.

இதனால், குறித்த வீதியுடனான போக்குவரத்து இன்று (6) பகல் தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அழஹகோன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கினிகத்தேனை நகர் ஊடாக நாவலப்பிட்டி மற்றும் கண்டி நோக்கி பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் கொழும்பு வீதியின் கினித்தேனை பஸ் தரிப்பிடம் ஊடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X