2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

Sudharshini   / 2016 மே 31 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர். கோகுலன்

ஊவா, பரணகம லக்கிலேண்ட் தோட்டத்தில் கால்வாய் ஒன்றுக்கு அருகிலிருந்து சிதைவடைந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளதென ஊவா பரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

சிதைவடைந்த நிலையில் சிசிவொன்றின் சடலம் கிடப்பதை  கண்ட பிரதேசவாசிகள், அது குறித்து பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து,  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் ஊவா பரணகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .