Editorial / 2018 ஏப்ரல் 17 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெபரவ, ரத்கிந்த ஆகிய பகுதிகளிலுள்ள இரண்டு வீடுகளில், அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த சூதாட்ட நிலையங்கள், கிராந்துருகோட்டை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டன.
இதன்போது, சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைதுசெய்யப்பட்டனர் என, கிராந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, 8,475 ரூபாய் பணத்தையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 19, 20, 29, 30, 52 வயதானவர்களெனத் தெரிவித்த பொலிஸார், இவர்கள் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025