2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

டயகம இளைஞனுக்கு ஜனாதிபதி விருது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமச்சந்திரன்

புத்தாக்க ஆணைக்குழுவினால் நுவரெலியா, டயகமப் பிரதேசத்தைச் சேர்ந்த நடராஜா இமாசுதனு என்ற இளைஞரொருவர், ஜனாதிபதி விருது பெற்றுக்கொள்வதற்குத் தெரிவாகியுள்ளார்.

Gsm controller என்ற சாதனத்தின் ஊடாக அலைபேசிக்கு ஒலி சமிக்ஞை செய்யக்கூடிய சிறந்த உபகரணத்தை கண்டுபிடித்தமைக்கே இவ்விருது வழங்கப்படவுள்ளது. இந்த சாதனத்தைக் கொண்டு உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பினை வழங்க முடியுமென இமாசுதன் தெரிவித்தார்.

இவர், கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று இப்போது திறந்த பல்கலைகழகத்தில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொள்கின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .