Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
டி. ஷங்கீதன் / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 56 வயதுடைய சுப்பிரமணியம் அந்தகுமார் என்பவர் நேற்று (6) மாலை 5.00 மணியளவில் நுவரெலியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த மாதம் முதலாம் திகதி, டுபாலிருந்து இலங்கையை வந்தடைந்த இவர், நுவரெலியாவில் உள்ள விருந்தகமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் நாடு திரும்பியிருந்ததுடன், நுவரெலியாவில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போது, சுகவீனம் ஏற்படவே இவர் 2ஆம் திகதி, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளார்.
இவருக்கு கொரோனா தொற்று தொடர்பான எவ்விதமான அறிகுறியும் இல்லை என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதுடன்.இவருடைய உயிரிழப்புக்குக் காரணம் இவருடைய உடலில் ஏற்பட்டிருந்த வைரஸ் தொற்று மற்றும் நீரிழிவே என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவருடைய சொந்த இடம் கொழும்பு என்ற போதிலும் இவருடைய உடலை இன்று நுவரெலியா மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
5 hours ago
5 hours ago