Editorial / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெல்தெனிய வைத்தியசாலையில் வைத்திய கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, அதே வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்தெனிய வைத்தியசாலையின் வைத்திய கண்காணிப்பாளர் சுனில் செனரத் யாப்பா பொலிஸில் அளித்த புகாரைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும், அவர்களை அச்சுறுத்தியதாகவும் புகாரில் குற்றச்சாட்டுகள் இருப்பதாக பொலிஸ் கூறுகிறது.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட வைத்தியர், வைத்தியசாலையின் ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸ் கூறுகிறது.
கைது செய்யப்பட்ட வைத்தியர், தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) மீண்டும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
29 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
36 minute ago
52 minute ago