2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேயிலை செடிகளுக்குள் ஓடிய வௌ்ளை கார்

Editorial   / 2024 மார்ச் 25 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில், திங்கட்கிழமை (25) காலை 08 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி கார் அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளது. அப்போது நாயொன்று  வீதியை கடக்க முட்பட்டுள்ளத, நாயை காப்பாற்றும் முயற்சியால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார்  தேயிலை செடிகளுக்குள் சென்றுவிட்டது.

விபத்தின் போது, ​​காரில் நான்கு பேர் இருந்தனர், அவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவித் பொலிஸார் கார் பலத்த சேதமடைந்ததுள்ளது என்றனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .