2025 ஜூலை 21, திங்கட்கிழமை

நிவாரண கொடுப்பனவில் ஆசிரிய உதவியாளர்களை உள்வாங்கவும்

R.Maheshwary   / 2022 ஜனவரி 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள்  உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் , இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 “ சமகால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு விரைவாக அவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கும் கல்வி அமைச்சு நடவடிக்கையெடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு  அனைத்து அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் நிவாரண கொடுப்பனவை, சம்பளத்துடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது. ஆனால், இந்த விடயத்தில்  உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை.

ஆசிரிய நியமனத்துக்கான அனைத்து தகமைகளையும் இவர்கள் முழுமையாக பூர்த்தி செய்துள்ள சூழலில் இன்னமும் இவர்களுக்கு நிரந்தர நியமனமும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இவர்களது முழுமையான திறமையை பாடசாலைகளில் வெளிப்படுத்த சந்தர்ப்பமும் கிடைப்பதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் ஊவா மாகாணத்தில்  கல்வி அமைச்சராகவிருந்த காலப்பகுதியில் ஊவா மாகாணத்தில்  90 சதவீதம் ஆசிரிய உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் 2019 தொடக்கம் 2022 ஆம் ஆண்டு வரை வழங்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.நான் கல்வி அமைச்சராக இருந்த போது ஒரே நாளில் 400 உதவி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுத்திருந்தேன். இதனால் நிரந்தர நியமனத்தை வழங்குவது என்பது மிகவும் கடினமாக காரியம் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன். நியமனம் வழங்கும் முறைமை தாமதமடைவதற்கு காரணங்கள் எதுவும் கிடையாது. ஆனால் இந்த நியமனங்களை வழங்குவத்தில் ஏன் இந்த தாமதம் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்றார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X