Editorial / 2024 நவம்பர் 13 , பி.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவா ஸ்ரீதரராவ்
காவத்தை நீலகாமம் இலக்கம் 4 தோட்டப் பிரிவின் லயன் குடியிருப்பில் பாரிய ஆல மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் புதன்கிழமை (13) மாலை பெய்த அடை மழை காரணமாக காவத்தை நீலகாமம் இலக்கம் 4 தோட்டப் பிரிவின் லயன் குடியிருப்பில் பாரிய ஆல மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆலயம் உட்பட குறித்த லயன் குடியிருப்பின் 7 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் இதில் ஆறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் பலத்த காயமடைந்த இருவர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் P.முத்துசாமி (59 வயது) இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும்
M. அழகம்மா (74 வயது) காவத்தை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
47 minute ago
58 minute ago