2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

பஸ்விபத்தில் பதினான்கு பேருக்கு காயம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.செல்வராஜா

பதுளை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸொன்றும் எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்ஸொன்றும் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானதில், பஸ்ஸின் சாரதியுட்பட 14 பேர் காயங்களுக்குள்ளான நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவ்விபத்துச் சம்பவம், பதுளை, பசறை வீதியில், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அருகாமையில், நேற்று சனிக்கிழமை (03)  இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் பத்துப் பெண்களும் நான்கு ஆண்களும் உள்ளடங்குவதாகப் பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .