2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘பிரதேச சபைத் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்படுவார்’

Editorial   / 2018 மார்ச் 25 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.சதீஸ்  

 

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பிரதேச சபையொன்றின் தலைவராக, பெண்ணொருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், பெண்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கிலேயே, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார்.  

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மகளிர் தின விழா, பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கலாசார மண்டபத்தில், நேற்று முன்தினம் (24) நடைபெற்றது. அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில், இ.தொ.க சார்பில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 16 பெண்களுள் ஒருவரை, பிரதேச சபையின் தலைவராக நியமிக்க உள்ளதாகவும் இது தொடர்பில், இன்று (26) அறிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .