2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள்களுடன் கைதுசெய்யப்பட்ட 25 பேர் பிணையில் விடுதலை

R.Maheshwary   / 2022 ஜனவரி 24 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

போதைப்பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 27 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் காணப்பட்ட கஞ்சா மற்றும் போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

நல்லதண்ணி மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

18 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 25 பேரை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .