2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
 
நுவரெலியாவிலிருந்து பத்தனை பகுதியிலுள்ள உறவினர்கள் வீட்டுக்குச் சென்ற முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் சென்கிளயார் பகுதியில் குறித்த முச்சக்கரவண்டி பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடந்த 13ஆம் தியதி இரவு 7 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக, தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி வழுக்கல் தன்மையுடன் காணப்பட்டதனால் முச்சக்கரவண்டியினைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ் விபத்து நேர்ந்துள்ளதாக, பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் சாரதியும், ஏனைய இருவரும் பயணித்துள்ளதாகவும், மூவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.  

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதன் காரணமாக வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செலுத்த வேண்டும் என பொலிஸார் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .