Gavitha / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ
கொழும்பிலிருந்து பொகவந்தலாவயை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (07)அதிகாலை 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டி, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டியை, அதன் சாரதி வேகமாகச் செலுத்தி வந்ததனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Apr 2026