Kogilavani / 2016 ஜூன் 19 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
இலங்கை தொழிலாளர் காங்கிரிஸின் மாவட்ட தலைவிகளுக்கான, 'பெண்கள் தலைமைத்துவம்' பயிற்சி பட்டறை கொட்டகலை, தொண்டமான் தொழிற் பயிற்சி நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று(19) நடைபெற்றது.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தில் ஸ்தாபகர் டொங்லி தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இற்கும் மேற்பட்ட தலைவிகள் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர் எஸ்.அருள்சாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையின் ஆரம்பிப்பு நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான முத்துசிவலிங்கம், மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


6 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
12 Apr 2026
12 Apr 2026