2024 மே 02, வியாழக்கிழமை

மண்மேடு விழுந்ததில் ஒருவர் பலி

Editorial   / 2024 ஏப்ரல் 01 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடொன்றின் அத்திபாரத்துக்கான மதிலை கட்டிக்கொண்டிருந்த இருவர் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  பூஜாபிட்டிய கஹவத்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற சம்பவத்தில், பூஜாபிட்டிய திவானவத்த பகுதியைச் சேர்ந்த ஜகத் விஜேசூரிய (வயது 54 ) உயிரிழந்துள்ளார் இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார்.

  இருவரையும் உடனடியாக மீட்ட பிரதேசவாசிகள் அவர்களை  அக்குறணை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆபத்தான நிலையில் இருந்த மற்றைய நபர் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .