2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மருமகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய மாமனார் கைது

Sudharshini   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

தனது சொந்த மருமகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய மாமனாரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று (12)  கைதுசெய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையிலே, சந்தேக நபரான 49 வயதுடைய மாமனாரை கைதுசெய்துள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட பெண் 40வயது மதிக்கத்தக்கவர் எனவும் அப்பெண், தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று (12) கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .