2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மாடுகளுடன் இருவர் கைது

Editorial   / 2018 பெப்ரவரி 25 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கெக்கிராவையிலிருந்து அக்குறணைக்கு, மாடுகளை சட்டவிரோதமான முறையில் லொறியில் கொண்டு சென்ற இருவரை, இன்று (25) கைதுசெய்துள்ள அலவத்துகொடை பொலிஸார், மாடுகளை மீட்டுள்ளதுடன், லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினடிப்படையில், கண்டி - மாத்தளை வீதியில் வைத்து லொறியை வழிமறித்த பொலிஸார், மாடுகளை மீட்டதுடன், இருவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 10 மாடுகள் மீட்கப்பட்டுள்ளனவென தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .