2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கணேசன்)

மஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தைப் பிரிவில் நேற்று (14) மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அத்துடன் மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்குரிய நிவாரணங்கள் பிரதேச பொதுமக்களாலும் தோட்ட நிர்வாகத்தாலும் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில், பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .