2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி 60 வயது பெண் பலி

Kogilavani   / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூவேந்தன்  

ஹாலி - எல நாராங்கல தோட்டப் பகுதியில்,  மின்சார தாக்குதலுக்கு இலக்காகி 60 வயது பெண் உயிரிழந்துள்ளதாக, பொலஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண், இன்று காலை 10 மணியளவில் வறிய குடும்பங்களை சேர்ந்தோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற மாதாந்த பின்படி  உதவித்தொகையைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பும்போது,  வீதியில்  முறிந்து விழுந்துக் கிடந்த சவுக்கு மரக்கிளையை அகற்றமுயன்ற போதே, மின்சார கம்பியோடு ஒட்டிக்கிடந்த சவுக்கு மரக்கிளையோடு சிக்குண்டு மின்சாரத் தாக்கதலுக்கு உள்ளாகியுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .