R.Maheshwary / 2022 பெப்ரவரி 14 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஆராச்சி
கொரோனா தொற்று காரணமாக கைவிடப்பட்டுள்ள இ.போ.ச பஸ் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு புளத்கொஹூபிட்டிய பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கொரோனா தொற்றையடுத்து புளத்கொஹூபிட்டியவை அண்மித்த பல பகுதிகளுக்கான இ.போ.ச பஸ் சேவைகளானது, இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனனர்.
இதற்கமைய, கேகாலை பஸ் டிப்போ மூலம் முன்னெடுக்கப்பட்ட கெட்டியமுல்ல- மல்வானை ஊடாக கேகாலை மற்றும் கேகாலையிலிருந்து எலகல்ல, அவிசாவளை பஸ் டிப்போ மூலம் முன்னெடுக்கப்பட்ட புளத்கொஹூபிட்டியவிலிருந்து வேகல்ல வீதிக்கான போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்குமாறே பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .