2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ரயிலில் மோதி இறந்த மானை சமைத்து உண்ண முற்பட்ட ஐவர் கைது

Kogilavani   / 2016 மே 13 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

தலவாக்கலை, சென்எலின்ஸ் பகுதியில், ரயிலில் மோதுண்டு மரணமான மானை, உணவாக்க முயற்சித்த அத்தோட்டத்தைச் சேர்ந்த ஐவரை தலவாக்கலை பொலிஸார் இன்று பகல் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயிலில் மோதி மானொன்று உயிரிழந்துள்ளது. இதனை அவதானித்த மேற்படி ஐவரும் மானை எடுத்துச் சென்று சமைக்க முயன்றுள்ளனர்.

இதுதொடர்பில் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேற்படி ஐவரையும் கைதுசெய்ததுடன் மான் இறைச்சியையும் மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .