Freelancer / 2024 நவம்பர் 08 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன், எஸ்.ரமேஷ், பி.கேதீஸ்
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தபளை - கொங்கொடியா பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தப்பளை பிரதான நகரில் இருந்து கொங்கோடியா பகுதிக்கு மர்க்கறி சேகரித்து ஏற்றச்சென்ற டிப்பர் லொறியொன்று, பாதையை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த 6 பேரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து இராகலை பொலிஸா மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். AN
52 minute ago
59 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
3 hours ago
05 Nov 2025