2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

வீட்டுப் பணியாளர்கள் சங்கத்தின் நான்காவது மாநாடு

Kogilavani   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி நகரை மையமாகக்  கொண்டு இயங்கிவரும் செங்;கொடிச்சங்கத்தின்  கிளையான, வீட்டுப் பணியாளர்;கள் சங்கத்தின் 4ஆவது வருடாந்த மாநாடு கண்டி ஈ.எல்.சேனாநாயக்கா சிறுவர் நூலகக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.

இம்மாநாட்டில் கண்டி, ஹட்டன், நுவரெலியா, மட்டக்களப்பு, காத்தான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து இதன் அங்கத்தவர்;கள் கலந்துகொண்டனர்;. இந்நிகழ்வில், செங்கொடிச் சங்கப் பொதுச் செயலாளர்; மேனகா கந்தசாமி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்;. இதன்போது உரையாற்றிய அவர்,

 'வீட்டுப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இன்று நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.

வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர்களே என்ற வகையில் அவர்களது சம்பளத்தை நிர்ணயிப்பது தொடர்பிலான போராட்டத்தில் தற்போது நாம் ஈடுபட்டுள்ளோம்.  எங்களது உரிமைகளுக்காக நாமே போராட வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .