2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மாணவி பலி்:11 பேர் காயம்

Sudharshini   / 2016 ஜூன் 21 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா   

பதுளையிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸூம் எதிர்த்திசையில் வந்த கெப் ரக வாகனமும் பதுளை, கண்டி பிரதான வீதி ரன்தெனிகலவில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை (20) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வலப்பனையைச் சேர்ந்த சச்சினி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். மேலும் 11 பேர் காயமடைந்த நிலையில் வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களின் சாரதிகளையும் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .