Freelancer / 2022 ஏப்ரல் 09 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
தலவாக்கலை - மடக்கும்புர தோட்ட புதுகாடு பிரிவில் வயோதிபப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய காதில் அணிந்திருந்த தண்டட்டி மற்றும் நகைகளை கொள்ளையடித்து விட்டு சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
84 வயதுடைய கருப்பன் மூக்காயி என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு உடல் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago