2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்

J.A. George   / 2023 ஜூன் 16 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியத்தலாவையில் இன்று(16) காலை இரண்டு பஸ்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பஸ் மற்றும் பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி பண்டாரவளை நோக்கி  பயணித்த தனியார் பஸ் என்பன, தியத்தலாவை காஹகல்ல பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில்  5 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை பஸ்ஸின் சாரதி ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.

சம்பவம் தொடர்பில் தியத்தலாவை பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

-ராமு தனராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X