2025 ஜூலை 23, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாத்தளை, வத்துகாமம் வீதியில், நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக, வத்துகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

பொல்கொல்லையைச் சேர்ந்த ஆர்.ஏ.பொடிபண்டா (வயது 53) என்பவரே, விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையிலிருந்து வத்துகாமம் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இவரை, வத்துகாமம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பில் வத்துகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .