Janu / 2024 ஏப்ரல் 08 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரகமவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ஹங்குந்கெத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லூல்கந்துரை பிரதேசத்தில் வைத்து குன்றின் மீது கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சாரதியிடம் வேன் ஓட்டுவதற்குத் தேவையான கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் , வைத்தியசாலையிலிருந்து வெளியேறியவுடன் அவர் கைது செய்யப்படுவார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் படுகாயமடைந்த இரு பெண்களையும் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .


6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago