2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் அத்தியாவசிய சேவைக்காக எரிபொருள் விநியோகம்

R.Maheshwary   / 2022 மே 11 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹட்டனிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொட்டகலை எரிபொருள் கூட்டுதாபன களஞ்சியசாலையிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோல் என்பன நேற்று விநியோகிக்கப்பட்டன.

ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைக்காக குறித்த எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னர் ஏனைய வாகனங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .