2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உயிரிழந்த நபருக்கு தொற்று இல்லை

S. Shivany   / 2020 நவம்பர் 11 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ஜெயரட்ணம் 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்  தற்கொலை செய்து உயிரிழந்த, களுத்துறை டிப்போவில் பணியாற்றிய சாரதிக்கு, கொரோனா வைரஸ் தொற்று இல்லையென, பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை- நாகொடை  பொது வைத்தியசாலையில் இருந்து, மத்துகமை நகருக்கு  வைத்தியசாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ,லங்கை போக்குவரத்து சபையின்,  களுத்துறை டிப்போவுக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே, கடந்த 8ஆம் திகதி உயிரிழந்தார்.

களுத்துறை- நாகொடை பொது  வைத்தியசாலையில் பணிபுரியும்  ஊழியர் ஒருவர்,  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதையத்து,  தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளாரென தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .