2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஒரே சூலில் ஆறு செல்வங்கள்

Editorial   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை காசல் வைத்தியசாலையில், தாயொருவர்  ஆறு  சிசுக்களை பிரசவித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரசவித்த ஆறு சிசுக்களும் ஆண் குழந்தைகள் என்பது சிறப்பு அம்சம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறு குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் காசல் மருத்துவமனையின் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு குழந்தை கொழும்பு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகம பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவரே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், ஆறு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .