2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கம்பஹா பகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஜூன் 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா - யக்கல பகுதிகளில் நாளை 28 மணிநேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் மாலை 6 மணிவரை இவ்வாறு நீர் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கம்பஹா மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொழும்பு - கண்டி வீதியின் மிரிஸ்வத்த சந்தியில் இருந்து அலுத்கம - போகமுவ தேவாலயம் வீதி வரை இந்த நீர் தடை அமுலாகும்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யக்கல பாலத்தில் பொறுத்தப்பட்டுள்ள தற்காலிக நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .