2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

களுத்துறை மாணவி படுகொலை: ஒருவருக்கு பிணை

Editorial   / 2023 மே 15 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறையில் ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில் மூன்றாவது மாடியின் அறையில் இருந்து முழு நிர்வாணமாக கீழே விழுந்து மரணமடைந்த 16 வயதான மாணவின் மரணம் தொடர்பிலான வழக்கு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாணவியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேநபர்கள் மூவரும் மே. 26ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

சிறுமியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற இளம் ஜோடி மற்றும் பிரதான ​சந்​தேநபர் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், ஹோட்டல் உரிமையாளரின் மனைவி பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .