2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

குண்டு வீச முயன்றவர் கைது

Editorial   / 2023 நவம்பர் 27 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் மீது குண்டு வீச முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் வெறிச்சோடிய வீடொன்றில் பதுங்கியிருந்த நபரை கைது செய்வதற்காக அங்கு சென்ற மாளிகாவத்தை பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழு மீது வெடிகுண்டு வீச முயன்றதாக கூறப்படும் நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிகுண்டும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அது இந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் மாளிகாவத்தை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X