Editorial / 2023 நவம்பர் 20 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}


புத்தக விற்பனை நிலையத்திற்கு வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் வாள் போன்ற கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கடையின் உரிமையாளர் உட்பட இருவர் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மாம்புல்கொட பிரதேசத்தில் இயங்கிவரும் புத்தக விற்பனை நிலையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புத்தகக் கடையின் உரிமையாளர் அந்த இடத்தில் இருந்தபோது, திடீரென வந்த இனந்தெரியாத நபர் அவர் மறைத்து வைத்திருந்த வாள் போன்ற கூரிய ஆயுதத்தை எடுத்து கடையின் உரிமையாளரைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை சமரசம் செய்த அயலவர், கூரிய ஆயுதம் தாக்கியதில் கழுத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் கடையின் உரிமையாளர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago