2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளவத்தையில் சிறுமி மாயம்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 03 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை- டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுதி நேற்று (2)அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர்  காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 வயதான குறித்த சிறுமி, தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ள வெள்ளவத்தை பொலிஸார் சிறுமியைத் தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .