2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார்: சாந்தனின் சகோதரன்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நாள் தான் என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். அதை விட என் முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனி 3 நேரமும் சாப்பிடுவார். என்று இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாந்தனின் சகோதரனான மதி சுதா தெரிவித்தார்

இந்திய உச்ச நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தமிழக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நாளை நான் எப்படி சொல்வதென்றே தெரியவில்லை  என் வாழ்வின் எல்லைகளற்ற சந்தோசம் பெற்ற நாள். இந்நாளாகதான் இருக்கமுடியும். இதை கொண்டாட அப்பா இல்லை என்ற குறை ஒன்றைத் தவிர எமக்குள் எந்த சந்தோசத் தடைகளும் இல்லை. இதே தான் ஏனைய ஐந்து பேரின் குடும்பத்திலும் இருக்கும் என்று தெரியும் என்றும் அவர் கூறினார்.

அதை விடவும் எனக்கு முக்கிய சந்தோசம் என்னவென்றால் அம்மா இனிமேல் மூவேளைகளும்  சாப்பிடுவார். அதே போல நாம் உண்ணும் உணவுகளையும் உண்ணுவார். காரணம் அவர் ஒரு நேரம் மட்டும் தான் உணவு  உண்பதுண்டு, அதுவும் அங்கு அண்ணா சாப்பிடாத சாப்பாடெதுவும் அவர் சாப்பிடுவதேயில்லை. அது கூட பல தடவை விரதம் என்றால் வெறும் சாணி நிலத்தில் போட்டுத் தான் சாப்பிடுவார். நரகத்தில் வாழ்வது வேறு நரகத்தை பார்த்து வாழ்வது வேறு என்ற சொல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

நாம் இப்போது சொர்க்கத்திற்கு இடம் மாற்றப்பட்டிருக்கிறோம். அதே போல என் தாய் போல வாழும் ஒவ்வொரு தாயின் கண்ணீரும் துடைக்கப்பட வேண்டும் என்பதே என் ஆசை. அண்ணாவின் ஆசையும் தன் இறுதிக்காலத்தை தான் பிறந்த மண்ணில் முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பல நூல்களை எழுதிய ஒரு சிறந்த இலக்கியவாதியான அவரை  சட்டமும் அனுமதித்து எம்மோடு சந்தோசமாக வாழ வழி அமைத்துத் தர வேண்டும் என்பதே என் ஆசை என்று கூறிய அவர் அண்ணனின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் என்னுடைய குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .