2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

யாழில் 35 துப்பாக்கி ரவைகள் மீட்பு

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 07 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
 
யாழ். சுன்னாகம் ஜயனார் சனசமூக நிலைய வாசிகசாலை கட்டிடத்திற்குள் இருந்து 35 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
 
வாசிகசாலையினை துப்பர செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, இந்த துப்பாக்கி ரவைகள் இருப்பது அவதானிக்கப்பட்டு, சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மேற்படி ரவைகளை மீட்டுச் சென்றனர்.
 
இது ஏற்கனவே அங்கு இருந்தவையா அல்லது யாராவது கொண்டு வந்த அங்கு போட்டார்களாக என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .