2025 ஜூன் 18, புதன்கிழமை

கோப்பாய் பிரதேசத்துக்கு 3,563 வீடுகள் தேவை: பிரதேச செயலர்

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணம், வலிகாமம் கிழக்கு, கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் 3,563 வீடுகள் தேவையாக உள்ளதென கோப்பாய் பிரதேச செயலர் என். பிரதீபன் இன்று தெரிவி;த்தார்.

வலிகிழக்கு உரும்பிராய் பகுதியில் யாழ். பாதுகாப்பு படை பிரிவின் 25ஆவது ரெயிமென்ட் படை பிரிவினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி குடும்பம் ஒன்றிற்கு நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும்; உரையாற்றுகையில், இப்பிரதேசத்தில் வீட்டுத் தேவைகள் அதிகமாக காணப்படுவதனால், இவ்வாறான செயற்பாட்டினை எவர் செய்தாலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அவ்வாறு உதவிகளை செய்யும் பட்சத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குடும்பங்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

அதேவேளை, இப்பகுதியில் பல வீடுகள் அரசாங்கத்தின் நிதி உதவியுடனும், பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களினாலும் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வலளாய் பகுதியில் வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தின் வீட்டு தேவைகளை குறைவடைவதுடன், புள்ளி விபரங்களையும், குறைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே, இப்பிரதேசத்தின் வீட்டு திட்டத்தினை குறைப்பதற்கு சமூக அமைப்புக்கள் மற்றும் சமூக பொறுப்பு கூறல் அமைப்பக்கள் வீட்டு தேவையினை பூர்த்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டுமென்றும் கோப்பாய் பிரதேச செயலர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளியின் குடும்பம்  புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர், வலி கிழக்கு, உரும்பிராய் பகுதியில் மீள்குடியமர்ந்த இக்குடும்பம் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திகொள்ள முடியாமல் இருந்த போது, உரும்பிராய் 25வது ரெஜிமெட் படை பிரிவினரால் தெரிவு செய்யப்பட்டு வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படை பிரிவினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்வீட்டின் திறப்பினை சம்பிரதாய பூர்வமாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் கோப்பாய் பிரதேச செயலர் பிரதீபன் ஆகியோர் கையளித்தனர்.

கோப்பாய் பிரதேச செயலக பிரிவின் உரும்பிராய் ஜேஃ265 கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள பகுதியில் 25ஆவது ரெஜிமெட் படைப் பிரிவினரால் நிர்மாணிக்கப்பட்டது. சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான இவ்வீடு சுமார் 1 இலட்சத்து 68 ஆயிரம் ரூபா நிதியில் இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்ப்படத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .