2025 மே 21, புதன்கிழமை

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி உண்ணாவிரதம்

Super User   / 2011 ஜூன் 04 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்  கோரி யாழ். துரையப்பா விளையாட்டரங்களில் ஒருவர் இன்று உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

'போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் 'பிரதிநிதியான வவுனியாவைச் சேர்ந்த என். சகாதேவன் என்பவரே இவ்வாறு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

கடந்த கால போரின் காரணமாக, இழக்கப்பட்ட உயிர் உடமைகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா. உதவி வழங்க வேண்டுமெனவும் கோரி அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்.

இம்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லையெனில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • wiki Monday, 06 June 2011 02:57 AM

    இதில் இருந்து ஒன்று தெரிகிறது. எந்த அரசியல்வாதிகளோ, கட்சிகளோ ஒன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யவில்லை .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .