2025 மே 21, புதன்கிழமை

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக் கோரி இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 05 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,கிரிசன்)

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதி ஜி.வி;.சகாதேவனின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கத்திற்கு அருகாமையில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அமைப்பின் பிரதிநிதி ஜி.வி;.சகாதேவன் நேற்று சனிக்கிழமை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதமொன்றை ஆரம்பித்திருந்தார்.

இவரது போராட்டத்தை இதுவரையில் எந்தக் கட்சிகளோ அல்லது அமைப்புக்களோ சென்று பார்க்க முன்வரவில்லை.  தமது பத்து அம்சக் கோரிக்கைகள்  ஏற்றுக்கொள்ளப்படுமாகவிருந்தால்  தனது போராட்டம் கைவிடப்படுமென  என்.சகாதேவன் கூறினார்.(படப்பிடிப்பு:-கவிசுகி)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .