2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

அராலியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: இருவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 03 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமிதா)

யாழ். அராலிப்பகுதியில் இன்று மாலை 8.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது...

இன்று மாலை 8.30 மணியளவில் அரியாலை பகுதியில் போதையிலிருந்த இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் கருத்துமோதல் ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்துள்ளது. போதையில் கெடையொன்றுக்கு சென்று அங்கு தகராறில் ஈடுபட்ட இளைஞர் குழுவிற்கும், அதனைத் தட்டிக்கேட்க சென்ற மற்றுமொரு இளைஞர் குழுவுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலில் இரும்பு கம்பி தாக்குதலுக்குள்ளான இரு இளைஞர்கள் தற்சமயம் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .