2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

சரவணபவன் எம்.பி.யின் வாகனம் மீது கல்வீச்சு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனின் வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பார்வையிடுவதற்காக அப்பகுதிக்குச் சென்ற போதே அவரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சரவணபவன் எம்.பி – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது வாசலுக்கு முன்னால் குறித்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தின்போது அவ்விடத்தில் இராணுவத்தினர் இருந்தனர். இருப்பினும் சந்தேகநபர்களைப் பிடிக்கும் முயற்சிகளை அவர்கள் முன்னெடுக்கவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்ற பாதுகாப்பு குழு நிலை விவாதத்தின்போதும் எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்க உள்ளதாக சரவணபவன் எம்.பி மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0

  • AJ Wednesday, 28 November 2012 12:10 PM

    ஹ ஹ எங்கும் இல்லாத அடக்கு முறை அடாவடி தனம் இங்கு, இந்த நாட்டில் தான் நடக்கிறது. இப்படியான நிகழ்வுகள் தொடரும் என்றால் நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்வி குறிதான். நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நாட்டுக்கு நல்லதாக இல்லை.

    Reply : 0       0

    rima Wednesday, 28 November 2012 01:33 PM

    இது ஓர் காட்டுமிராண்டி செயல். இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இப்ப நடந்தது நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்னுக்கு, நாளை உங்களுக்கு நடக்கக்கூடும்...

    Reply : 0       0

    Sumathy m Wednesday, 28 November 2012 03:40 PM

    முன்பக்கம் உண்மையாகவே உடைந்த மாதிரி இருக்குது. மற்றப்பக்கம் என்னவோ தெரியவில்லை. முன்னுக்கு வாளுடன் நிக்கிற சிங்கமும் நல்லா இருக்கு. நான் நினைச்சனான் சரா அண்ண சரியான கொள்கைப்பற்றுள்ளவர் உதய் எல்லாம் ஒட்டமாட்டார் எண்டு. கதைக்கிறதை எல்லாம் செய்வினம் எண்டு நினைச்சால் அது எங்கட பிழைஎல்லோ. எதுக்கும் சரா அண்ண பிரச்சாரத்திற்கு உங்களுக்கு இரண்டு மூண்டு மாதங்களுக்கு காணும். இனியென்ன அரசாங்கம் புதுசொண்டு தரும். வாங்கி சொகுசா ஓடுங்கோ.
    BLESSING IN DISGUISE தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .