2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழ் மாநகர சபையில் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம்

Kanagaraj   / 2013 மார்ச் 01 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் குற்றஞ்சாட்டியதையடுத்து இருவருக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

யாழ். மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மதியம் நடைபெற்றது. இதன் போதே இருவருக்கும் இடையில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது, யாழ். கொழும்புத்துறை வசந்தபுரம் கிராமத்தின் பெயர் மாற்றப்பட்டு தேவாபுரம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சூட்டப்பட்டதற்கான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது ஆளும் தரப்பிற்கு சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மு.ரெமிடியஸ் வாதிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினராக இருந்து கொண்டு ஆளுந்தரப்பிற்கு ஆதரவளிப்பதாக குற்றஞ்சாட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இருக்கையில் இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இடைமறித்த மு.ரெமீடியஸ் உங்களுக்கும் எனக்கும் தொடர்பில்லை, நான் போட்டியிட்டிருக்காவிட்டால் உங்களுக்கு இருக்கையில்லை, நான்காயிரம் வாக்குகளை பெற்ற நான் இருக்கையில் இருக்கக்கூடாது, என ஆயிரம் வாக்குகளை பெற்ற நீங்கள் இருக்கையில் இருக்க வேண்டாமென கூறுவதுடன், வெளியேற சொல்ல  முடியுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த விந்தன் கனகரத்தினம், ஆளும் தரப்புடன் இணைந்து செயற்படுவதுடன், வசந்தபுரம் கிராமத்திற்கு தேவாபுரம் என பெயர் மாற்றப்பட்டது மாகாண சபைக்கு அறிவிக்கப்படாமல், அவ்வாறு அறிவிக்காமல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சூட்டப்பட்டது சட்டத்திற்கு முரணானது, அவ்வாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் சூட்டப்பட வேண்டுமென எண்ணினால் சட்டத்தின் படி பெயர் மாற்றத்தினை மேற்கொண்டிருக்க வேண்டுமென கூறினார்.

நான் மாநகர சபை எல்லைக்குள் வசிப்பவன் எனக்கு அதிகாரம் இருக்கு என சாதி, இனம் போன்றவற்றினை விமர்சிக்கும் முகமாக மன்றில் நடந்து கொண்டார் என்றும், அநேகமானவர்கள் யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பிற பிரதேசங்களினைச் சார்ந்தவர்கள் அந்தவகையில், சட்டத்தரணி ரெமீடியஸ் அரசியலுக்கு பொருத்தமற்றவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் குற்றஞ்சாட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .