2025 ஜூன் 18, புதன்கிழமை

புலிகளின் இலட்சினை பதித்த புத்தகங்கள் மீட்பு

Kanagaraj   / 2013 மார்ச் 01 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரூபன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினை பொறிகப்பட்ட புத்தகங்கள் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு வல்லிபுரப் பகுதியிலிருந்தே விடுதலைப் புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்ட 290 புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெஃப்ரி தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று இடம் பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் கடந்த 27 ஆம் திகதி குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் இலட்சனை பொறிக்கப்பட்டு பாவனைக்கு உட்படுத்தப்பட்ட புத்தகங்கள் மீட்கப்பட்டன.

மறைத்து வைக்கப்பட்டிருந்த அபிவிருத்திக் கல்வி, பொருளாதாரக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி போன்ற 290 புத்தகங்களினை விசேட அதிரடி படையினரும், பொலிஸாரும் இணைந்து மீட்டுள்;ளனர். மீட்கப்பட்ட புத்தகங்கள் யாவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .