2025 ஜூன் 18, புதன்கிழமை

வீதி அகலிப்பு பணிக்கான யாழில் மின் தடை

Menaka Mookandi   / 2013 மார்ச் 01 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்கும் புதிய உயர் அழுத்த மார்க்கங்களின் நிர்மான வேலைகளுக்காகவும் யாழில் சில இடங்களில் மின்விநியோகம் தடைப்படும் என்று பிரதேச மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளை சனிக்கிழமை மருதனார்மடம், இணுவில், கோண்டாவில், கொக்குவில், பூநாறிமரத்தடி, நாச்சிமார் கோவிலடி, தட்டார்தெரு, கோம்பையன்மணல் பிரதேசம், கச்சேரி நல்லூர் வீதி, நல்லூர் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் காலை 08.30 மணி தொடக்கம் மாலை 05.00 மணிவரை மின்விநியோகம் தடைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை  மருதனார்மடம், உரும்பிராய், கோண்டாவில், மருத்துவபீடப்பிரதேசம், திருநெல்வேலிப்பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ் மாநகரசபைப்பகுதி, ஸ்ரான்லி வீதி, கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப் பிரதேசம், அராலி, மருத்துவபீடப் பிரதேசம், முடமாவடிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, பாற்பண்ணைப் பிரதேசம், அளவெட்டி, மல்லாகம் ஒரு பகுதி, பன்னாலை, வித்தகபுரம், சிறுவிளான், விளான், அம்பனை ஆகிய இடங்களிலும் காலை 8.30 மணி தொடக்கம் 5.00 மணிவரை மினிவிநியோகம் தடைப்படும் என்று பிரதேச மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .