2025 ஜூன் 18, புதன்கிழமை

வடக்கின் மாபெரும் போர்; ஏற்பாடுகள் பூர்த்தி

Menaka Mookandi   / 2013 மார்ச் 02 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

இலங்கையிலேயே பிரபலமான கிரிக்கெட் போட்டியான வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன், சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் என்.ஜே.ஞானப்பொன்ராஜா இவ்வருடத்திற்குரிய வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள் பற்றி கருத்துத் தெரிவிக்கும் போது,

"எதிர்வரும் 7ஆம் திகதி மார்ச் மாதம் 107ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டப் போட்டியினை தாம் நடத்தவுள்ளதாகவும், தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள வடக்கின் மாபெரும் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் செய்யப்படுவதாகவும், வீதிகளில் இடம்பெறும் போக்குவரத்து மற்றும் அசம்பாவித பிரச்சினைகளை கையாள்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

தொடர்ந்து இரு அணிகளுக்குமான 50 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்ட போட்டிகள் மார்ச் மாதம் 16 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது" என்று தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .