2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில், மாணவன் சடலமாக மீட்பு

Kanagaraj   / 2013 மார்ச் 02 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா -எஸ்.கே.பிரசாத்

யாழ்ப்பாணத்தில் 11 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சக மாணவர்களுடன் இன்று சனிக்கிழமை சென்றிருந்த வேளையில் அம்மன் கோயில் கேணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறிவிழுந்தே  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதுமலை, ஆணைக்கோட்டை 4 ஆம் கட்டயைச்சேர்ந்த ஜேசுபாலன் சயந்தன்( வயது 11 ) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்விப்பயின்று வருகின்றார். பாடசாலையில் தளபாடங்களை அடுக்குவதற்காகவே குறித்த மாணவன் சென்றிருந்ததாகவும் இதன் போதே நண்பர்களுடன் இணைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .