2025 ஜூன் 18, புதன்கிழமை

யாழில் உருளைக்கிழங்கு விவசாயிகளின் விபரங்கள் திரட்டு

Kogilavani   / 2013 மார்ச் 04 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கிரிசன்

யாழ்.மாவட்டத்தில் உருளைக்கிழங்கு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளின் விபரங்கள் விவசாயத் தினைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

புன்னாலைக்கட்டுவனில் உள்ள விவசாயிகள் தாம் பயிர்ச்செய்கையின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே உருளைக்கிழங்கு விவசாயிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மாதம் யாழிற்கு விஜயம் மேற்கொண்;டிருந்த போது,

விவசாயிகள தாம் உருளைக் கிழங்கு பயிர்செய்கை செய்வதாகவும் அதனை சந்தைப்படுத்தும் காலத்தில் உருளைக் கிழங்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதினால் சந்தையில் உரிய விலையைபெற முடியாத நிலமை காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் செய்கைபண்ணப்படும் உருளைக்கிழங்கு சந்தைக்கு விற்பனைக்க வரும் வேளைகளில் வெளிநாட்டில் இருந்து இறக்கமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் இறக்குமதி கட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புன்னாலைக்கட்டுவன் விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .